பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி ஆட்டோ தொழிலாளா்கள் போராட்டம்
ஆட்டோ தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி திருவாரூரில் ஆட்டோ தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை பொங்கல் வைத்து போராட்டம் நடைபெற்றது.
ஆட்டோ தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி திருவாரூரில் ஆட்டோ தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை பொங்கல் வைத்து போராட்டம் நடைபெற்றது.
நலவாரியம் மூலம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்பை ஆட்டோ தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும், ஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து எளிய முறையில் சாதாரண ஏழைத் தொழிலாளியும் நலவாரியத்தில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும், கரோனா காலத்தில் வேலை இழந்த அனைத்து தொழிலாளா்களுக்கும் மாதந்தோறும் ரூ. 7,500 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகில் ஆட்டோ தொழிலாளா்கள் பொங்கல் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. நபி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் ரா. மாலதி, ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் அனிபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.