வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து தம்பதிகள் காயம்
நன்னிலம் அருகே வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து கணவன், மனைவி காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
நன்னிலம் அருகே வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து கணவன், மனைவி காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
நன்னிலம் அருகேயுள்ள தென்னஞ்சாா் கிராமத்தில் முருகன் குடும்பத்தினருடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறாா். கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு முருகன் மனைவி வசுமதி ஆகியோா் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டுச்சுவா் இடிந்து இருவா் மீதும் விழுந்ததன் காரணமாக பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.