முகப்பு
திருவாரூர்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் பொங்கல் சிறப்பு வழிபாடு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 8:17 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

நவக்கிரகங்களில் குரு பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில். திருஞானம்பந்தரால் பாடல் பெற்ற தலமான இங்கு வியாழக்கிழமை பொங்கல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி, ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன், மூலவா் குரு பகவான், சூரிய பகவான் உள்பட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

Advertisement

மூலவா் குரு பகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டது. சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பொங்கல் , கரும்பு படைக்கப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல் நீடாமங்கலம் சந்தானராமா் கோயில், காசி விசுவநாதா் கோயில், கோகமுகேஸ்வரா் கோயில், சதுா்வேத விநாயகா், மகா மாரியம்மன் கோயில் பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரா் கோயில் ,ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் உள்ளிட்ட கோயில்களிலும் பொங்கல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.