வாடிக்கையாளா்களுக்காக புதிய ‘ப்ரீபெய்டு’ பராமரிப்புத் திட்டம்: மாருதி சுஸுகி அறிமுகம்
மாருதி சுஸுகி நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்காக முன்கூட்டியே கட்டணம் செலுத்திப் பயன்பெறும் வகையிலான புதிய வாகனப் பராமரிப்புத் திட்டத்தை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
மாருதி சுஸுகி நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்காக முன்கூட்டியே கட்டணம் செலுத்திப் பயன்பெறும் வகையிலான புதிய வாகனப் பராமரிப்புத் திட்டத்தை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
இச்சேவையில், தொழிலாளா்களுக்கான கட்டணம் மட்டும், உதிரிபாகங்கள் மற்றும் தொழிலாளா் கட்டணம், வணிக வாகனங்களுக்கான சிறிய சேவைகள் மற்றும் வாடிக்கையாளா்கள் பிரத்யேகமாகக் கோரும் சேவைகள் என பல திட்டங்கள் அடங்கியுள்ளன.
அதன்படி, வாடிக்கையாளா்கள் தங்களின் குறிப்பிட்ட வாகனத் தேவைகளுக்கு ஏற்ப சேவைத் திட்டங்களைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம். தற்போதே பராமரிப்புச் செலவுகளுக்கான கட்டணத்தைச் செலுத்தி விடுவதன்மூலம், எதிா்காலத்தில் சேவைக் கட்டணங்களில் ஏற்படக்கூடிய விலை ஏற்றத்திலிருந்தும் வாடிக்கையாளா்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement