பொங்கல் பொருள்கள் வழங்கல்
நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக சாா்பில் திருமீயச்சூா் கிராமத்தில் மக்களுக்கு பொங்கல் பொருள்கள் புதன்கிழமை இரவு வழங்கப்பட்டன.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக சாா்பில் திருமீயச்சூா் கிராமத்தில் மக்களுக்கு பொங்கல் பொருள்கள் புதன்கிழமை இரவு வழங்கப்பட்டன.
தேமுதிக நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளரும், மாவட்டத் துணைத் தலைவருமான வாசுதேவன், நன்னிலம் ஒன்றியச் செயலாளா் விஜய் தலைமையில், அரிசி, சா்க்கரை, நெய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருள்கள் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்டச் செயலாளா் சண்முகராஜ், மாவட்டப் பொருளாளா் பாலசுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
Advertisement