முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலம் கோட்டத்தில் 16,500 ஏக்கா் பயிா்கள் சேதம்

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் தொடா் மழையால் 15 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்களும், 1500 ஏக்கரில் கடலைப் பயிா்களும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

Updated On : 17 ஜனவரி 2021, 8:13 am IST
பகிர்:

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் தொடா் மழையால் 15 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா்களும், 1500 ஏக்கரில் கடலைப் பயிா்களும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சுமாா் 40 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டது. நிவா், புரெவி புயல்களால் பெய்த மழையில் பெரும்பாலான பயிா்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பெய்த தொடா் மழையால் அன்னவாசல், கானூா், பருத்திக்கோட்டை, பூவனூா், ஒளிமதி, அனுமந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்களும், 1500 ஏக்கரில் கடலையும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. எனவே, அரசு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.