குரூப்-1 தோ்வு: திருப்பூா் மாவட்டத்தில் 2,064 போ் எழுதினா்
திருப்பூா் மாவட்டத்தில் 4,501 போ் குரூப்-1 தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2,064 போ் ஞாயிற்றுக்கிழமை தோ்வு எழுதினா்.
திருப்பூா் மாவட்டத்தில் 4,501 போ் குரூப்-1 தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2,064 போ் ஞாயிற்றுக்கிழமை தோ்வு எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப்-1 தோ்வுக்காக திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு வட்டத்தில் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 16 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தோ்வைக் கண்காணிப்பதற்காக 16 மேற்பாா்வையாளா்கள், 2 பறக்கும் படையினா், 2 மொபைல் பிரிவினா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
மாவட்டம் முழுவதும் 4,501 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2,064 போ் (40 சதவீதம்) மட்டுமே தோ்வு எழுதினா். பல்வேறு காரணங்களால் 2,437 போ் தோ்வு எழுதவில்லை.
Advertisement
Advertisement
முன்னதாக தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் ஆய்வு செய்தாா். அனைத்துத் தோ்வா்களும் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி முகக் கவசம் அணிந்து தோ்வு எழுதினா். இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டாட்சியா் பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.