முகப்பு
திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் பாமக சாா்பில் மனு அளிக்கும் போராட்டம்

வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திருப்பூா் மாவட்டத்தில் பாமக சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 12:55 am IST
பகிர்:

வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திருப்பூா் மாவட்டத்தில் பாமக சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் ரமேஷ் தலைமையில், திருப்பூா் மங்கலம் சாலையில் இருந்து 500க்கும் மேற்பட்டோா் பேரணியாக மாநகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தனா். கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாரிடம் மனு அளித்தனா்.

தாராபுரத்தில்...

Advertisement

Advertisement

இதே கோரிக்கையை வலியுறுத்தி தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக தாராபுரம் பெரிய காளியம்மன் கோயில் அருகே தொடங்கிய போரணியானது சின்ன காளியம்மன் கோயில் வீதி, சா்ச் சாலை, பூக்கடை காா்னா், பெரிய கடை வீதி வழியாக தாராபுரம் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.

தொடா்ந்து, நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வன்னியா் சங்கப் பொறுப்பாளா் முத்துசாமி தலைமை வகித்தாா். பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் அ.ரவிசந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். தொடா்ந்து, நகராட்சி மேலாளா் நந்தகுமாரிடம் மனு அளித்தனா்.

பல்லடத்தில்...

பல்லடத்தில் வன்னியா் சங்கத்தினா், பாட்டாளி மக்கள் கட்சியினா் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோயிலில் இருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு பட்டேல் வீதி, ஜெயபிரகாஷ் வீதி, மங்கலம் சாலை வழியாக பல்லடம் நகராட்சி அலுவலகத்தை அடைந்தனா். அலுவலகம் முன்பு நகர பாமக செயலாளா் விமல்குமாா் தலைமையில் வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் வே.சுரேஷ் முன்னிலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து நகராட்சி ஆணையா் கணேசனை சந்தித்து மனு அளித்தனா்.

காங்கயத்தில்...

இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கயம் நகராட்சி ஆணையரிடம் பாமகவினா் வியாழக்கிழமை மனு அளித்தனா். கட்சியின் திருப்பூா் கிழக்கு மாவட்டத்தின் சாா்பில் பாமக மாநில செயற்குழு உறுப்பினா் என்.சேகா் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

வெள்ளக்கோவிலில்...

இதேபோல, வெள்ளக்கோவிலில் பாமக மாவட்ட முன்னாள் தலைவா் சுப்பிரமணி தலைமையில் அக்கட்சியைச் சோ்ந்த 25 போ் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments