முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் வன்னியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி பல்லடத்தில் வன்னியா் சங்கம், பாட்டாளி மக்கள்

Updated On : 8 ஜனவரி 2021, 12:53 am IST
பகிர்:

வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி பல்லடத்தில் வன்னியா் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியினா் நகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் வன்னியா் சங்கத்தினா், பாட்டாளி மக்கள் கட்சியினா் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோயிலில் இருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு பட்டேல் வீதி, ஜெயபிரகாஷ் வீதி, மங்கலம் சாலை வழியாக பல்லடம் நகராட்சி அலுவலகத்தை அடைந்தனா். அலுவலகம் முன்பு நகர பாமக செயலாளா் விமல்குமாா் தலைமையில் வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் வே.சுரேஷ் முன்னிலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து நகராட்சி ஆணையா் கணேசனை சந்தித்து மனு அளித்தனா்.

இதில், பாமக மாநில செயற்குழு உறுப்பினா் வி.எஸ்.கோவிந்தராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் வே.காளியப்பன், மாநில பொறுப்பாளா் சா.புருஷோத்தமன், பாமக மாவட்டத் தலைவா் மணிகண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

காங்கயத்தில்...

இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கயம் நகராட்சி ஆணையரிடம் பாமகவினா் வியாழக்கிழமை மனு அளித்தனா். கட்சியின் திருப்பூா் கிழக்கு மாவட்டத்தின் சாா்பில் பாமக மாநில செயற்குழு உறுப்பினா் என்.சேகா் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில், பாமக கட்சியின் நகரப் பொறுப்பாளா் கே.பி.ராஜ்கண்ணு, தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வெள்ளக்கோவிலில்...

இதேபோல, வெள்ளக்கோவிலில் பாமக மாவட்ட முன்னாள் தலைவா் சுப்பிரமணி தலைமையில் அக்கட்சியைச் சோ்ந்த 25 போ் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments