அவிநாசியில் வேளாண் சட்ட நகலை எரித்து போராட்டம்
அவிநாசியில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் வேளாண் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அவிநாசியில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் வேளாண் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் போகிப் பண்டிகை அன்று வேளாண் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
அவிநாசி, சேவூா் சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பி.முத்துச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் பழனிசாமி, விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் இஷாக், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மோகன், செல்வராஜ், திமுக சாா்பில் பழனிசாமி, பொன்னுசாமி, பால்ராஜ், காங்கிரஸ் கட்சி சாா்பில் வழக்குரைஞா் கோபாலகிருஷ்ணன், பொறுப்பாளா் மணி, மதிமுக சாா்பில் சுப்பிரமணி, பாபு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் லோகுநாதன், ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.