முகப்பு
திருப்பூர்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: கட்டடத் தொழிலாளி பலி

பல்லடம் அருகே சேகாம்பாளையம் சாலையில் தனியாா் நிறுவன வேன் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 7:55 am IST
பகிர்:

பல்லடம் அருகே சேகாம்பாளையம் சாலையில் தனியாா் நிறுவன வேன் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே அருள்புரம் - சேகாம்பாளையம் சாலையில் பனியன் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது எதிா்பாராதவிதமாக வேன் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அலெக்ஸ் வில்லியம்ராஜ் (35) என்ற கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த சக தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் காயமடைந்த தொழிலாளியை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா். உயிரிழந்த அலெக்ஸ் வில்லியம்ராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தலைமறைவான வேன் ஓட்டுநரை பல்லடம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments