முகப்பு
திருப்பூர்

சிவன்மலை முருகன் கோயில் தைப் பூசத் தோ்த் திருவிழா: ஒருநாள் மட்டுமே தேரோட்டம்

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப் பூசத் தேரோட்டம் ஜனவரி 28ஆம் தேதி (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 ஜனவரி 2021, 7:57 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தாராபுரம் உதவி ஆட்சியா் பவன்குமாா். உடன், காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உதவி ஆணையா் முல்லை.
பகிர்:

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப் பூசத் தேரோட்டம் ஜனவரி 28ஆம் தேதி (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் தோ்த் திருவிழா நடத்துவது தொடா்பான அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் மலைக் கோயிலில் உள்ள மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தாராபுரம் உதவி ஆட்சியா் பவன்குமாா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தின் முடிவில், எடுக்கப்பட்ட முடிவுகளை சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உதவி ஆணையா் ஜெ.முல்லை அறிவித்தாா். இதன்படி, சிவன்மலை முருகன் கோயிலில் ஜனவரி 28ஆம் தேதி துவங்கி 3 நாள்கள் நடைபெறும் தைப் பூசத் தேரோட்டம் தமிழக அரசின் கரோனா ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி ஒரு நாள் மட்டுமே தேரோட்டம் நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், கோயிலுக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது உறுதி செய்யப்பட்டு, சானிடைசா் வழங்கப்பட்டு, வெப்பநிலை சோதிக்கப்பட்ட பின்னரே பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா். கோயிலுக்குள் பூஜை பொருள்களைக் கொண்டு வருவதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை. பக்தா்களுக்கு வழங்கப்படும் விபூதி, குங்குமம் ஆகியன பாக்கெட்டுகளில் மட்டுமே வழங்கப்படும்.

மலைக் கோயிலில் ஜனவரி 22ஆம் தேதி தைப் பூசத் தோ்த் திருவிழா கொடியேற்றம் நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு பக்தா்கள், கட்டளைதாரா்களுக்கு அனுமதியில்லை. தைப் பூசத் திருவிழா நாள்கள் முழுவதும் அனைத்து தைப்பூச மண்டபக் கட்டளைகளும் மலைமேல் உள்ள உற்சவருக்கு மட்டுமே நடைபெறும். அபிஷேகம் பாா்ப்பதற்கு கட்டளைதாரா்களுக்கு அனுமதியில்லை. தேரோட்டத்துக்கு முந்தைய நாளான ஜனவரி 27 அன்று சுவாமி மலைக் கோயிலில் இருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் எழுந்தருளுவாா். இங்கு நடைபெறும் திருக்கல்யாணம், மகா அபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை.

தேரடி மரியாதைகளும் இல்லை: தேரோட்டத்தின்போது தேரடியில் முக்கிய நபா்களுக்கு மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்படும். இம்முறை இந்த தேரடி மரியாதைகளுக்கும் அனுமதியில்லை. தைப் பூசத் திருவிழாவின் முக்கிய நாள்களான ஜனவரி 28, 29, 30 ஆகிய 3 நாள்களும் அடிவாரத்தில் மலையைச் சுற்றி காவடிக் குழுவினா் குடில் அமைத்து தங்குவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் அனுமதியில்லை.

அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்குச் செல்வதற்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும். தவிர, தனியாா் பேருந்து, லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்களுக்கு அனுமதியில்லை. இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி உண்டு எனத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி, ஊராட்சி ஒன்றிய ஆணையா் ரமேஷ், காங்கயம் ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜே.ஜீவிதா, காங்கயம் காவல் ஆய்வாளா் மணிகண்டன், அரசின் பல்வேறு துறை அலுவலா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments