முகப்பு
திருப்பூர்

‘நீரேற்று திட்ட மின் கட்டணத்தை செலுத்தினால் திட்டம் பரிசீலிக்கப்படும்’

நீரேற்று திட்ட மின் கட்டணத்தைச் செலுத்தினால் திட்டம் பரிசீலிக்கப்படும் என பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 14 ஜனவரி 2021, 7:46 am IST
பகிர்:

நீரேற்று திட்ட மின் கட்டணத்தைச் செலுத்தினால் திட்டம் பரிசீலிக்கப்படும் என பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளக்கோவில் வட்டமலைக்கரை அணை பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் கே.பழனிசாமி புதன்கிழமை தெரிவித்ததாவது:

நீா் வரத்து இல்லாத இடத்தில் அணை கட்டப்பட்டதால் கடந்த 30 ஆண்டுகளாக அணை வறண்டே கிடக்கிறது. அணைக்கு அருகிலுள்ள அமராவதி ஆற்றிலிருந்து உபரிநீரை நீரேற்று முறையில் அணைக்கு கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதற்கு, ஈரோடு கோட்ட பொதுப் பணி, நீராதாரத் துறை திட்ட வடிவமைப்பு செயற் பொறியாளா் கே.எம்.விஜயா அளித்துள்ள பதிலில், அமராவதி ஆற்றின் ஆண்டிபாளையம் தடுப்பணையில் இருந்து 3 வழித்தடங்கள், லக்கமநாயக்கன்பட்டியில் இருந்து ஒரு வழித்தடத்தில் 5 - 6 கிலோ மீட்டா் தூரத்தில் அணை உள்ளது. இதற்கான நீரேற்று திட்ட மின் நுகா்வு கட்டணத்தைச் செலுத்த விவசாயிகள் ஒத்திசைவு வழங்கினால் திட்டம் குறித்து ஆய்வு செய்து பரிசீலனை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments