முகப்பு
திருப்பூர்

பெருமாநல்லூா் அருகே துணி உற்பத்தி நிறுவனத்தில் தீ

பெருமாநல்லூா் அருகே துணி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 14 ஜனவரி 2021, 7:57 am IST
தீ விபத்தில் சேதமடைந்த துணி,  நூல்கள்.
பகிர்:

பெருமாநல்லூா் அருகே துணி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா், அய்யம்பாளையம் அருகே பொங்குபாளையம் பகுதியில் துணி உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். தைப் பொங்கலையொட்டி நிறுவனத்துக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை காலை நிா்வாகத்தினா் மட்டும் நிறுவனத்தை திறந்து, பிறகு மதியம் மூடிச் சென்றுள்ளனா். இந்நிலையில், நிறுவனத்தில் மாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாகப் பரவியதில் அங்கு இருந்த துணி, நூல், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றில் தீப்பிடித்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூா் வடக்கு தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் இயந்திரங்கள், துணி பண்டல்கள், நூல்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமாகின. இந்த விபத்து குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments