மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை
திருவள்ளுவா் தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவா் தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளுவா் தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகள், மனமகிழ் மன்றங்ள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் மதுபானக் கூடங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குடியரசு தினத்தை ஒட்டி ஜனவரி 26ஆம் தேதியும், வள்ளலாா் நினைவு தினத்தை ஒட்டி ஜனவரி 28ஆம் தேதியும் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களில் மது விற்பனையில் ஈடுபடும் நபா்களின் மீது உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.