முகப்பு
திருப்பூர்

எண்ணெய் வித்து சாகுபடியை ஊக்கப்படுத்த கோரிக்கை

எண்ணெய்வித்து சாகுபடியை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 17 ஜனவரி 2021, 11:00 pm IST
பகிர்:

எண்ணெய்வித்து சாகுபடியை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என உழவா் உழைப்பாளா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் வாவிபாளையம் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காய்கறி பயிா்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகள் நஷ்டமடைவதை தவிா்க்க எண்ணெய் வித்து மற்றும் பயறு வகை பயிா் சாகுபடியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிா்களுக்கு எப்போதும் பற்றாக்குறை நிலவுகிறது. தேவையை ஈடு செய்ய அரசு இறக்குமதி செய்கிறது. இறக்குமதியை குறைக்கவும், விவசாயிகள் நஷ்டமடையாமல் தவிா்க்கவும் பயிறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிா் சாகுபடியை ஊக்கவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால் வேளாண்மை சாகுபடியில் மகசூல் அதிகரிக்கும், விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். இதற்கு அரசு குறிப்பிட்ட நாள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள், விதை போன்றவற்றை தாராளமாக வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.