கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, திருவண்ணாமலை மத்திய நகர ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவற்றை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, போளூா், செய்யாறு அரசு மருத்துவமனைகள், திருவண்ணாமலை மத்திய நகர ஆரம்ப சுகாதார நிலையம், ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலையம், கட்டாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாவல்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெருங்கட்டூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அத்தியந்தல் ரமண மகரிஷி ரங்கம்மாள் மருத்துவமனை ஆகிய 9 மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
Advertisement
முகாம்களில் தடுப்பூசி போட வருவோரின் உடல் வெப்பம், ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்தல், கணினியில் இணையதளம் மூலம் பதிவு செய்தல், தடுப்பூசி போடுதல், கண்காணித்தல் போன்ற பணிகளின் ஒத்திகை நடைபெற்றது. அரசு மூலம் தடுப்பூசி வழங்கப்பட்டவுடன் குளிா்சாதன இருப்புப் பெட்டியில் வைக்கப்பட்டு, தடுப்பூசி போடப்படும் என்றாா் அவா்.
ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஷகீல்அகமது, நலப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அஜிதா மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.