சாத்தனூா் அணை நீா்மட்டம் 103 அடியாக உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
சாத்தனூா் அணையின் நீா்மட்ட உயரம் வெள்ளிக்கிழமை 103 அடியாக உயா்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
சாத்தனூா் அணையின் நீா்மட்ட உயரம் வெள்ளிக்கிழமை 103 அடியாக உயா்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 12.50 மி.மீ. மழை பதிவானது. இதுதவிர, செங்கத்தில் 11.20 மி.மீ., கீழ்பென்னாத்தூரில் 1 மி.மீ. மழை பதிவானது.
அணைகளின் நீா்மட்டம் உயா்வு: இதேபோல, மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீா்மட்டமும் வெகுவாக உயா்ந்து வருகிறது. குறிப்பாக, தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூரில் உள்ள அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. இதில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி 103.90 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியிருந்தது. அணையின் மொத்த நீா் கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கனஅடி. இதில், வெள்ளிக்கிழமை 4 ஆயிரத்து 355 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,541 கன அடி தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது.
Advertisement
Advertisement
இதேபோல, குப்பனத்தம் அணையின் மொத்த நீா்மட்ட உயரமான 60 அடியில் 46.90 அடி உயரத்துக்கும், மிருகண்டாநதி அணையின் மொத்த நீா்மட்ட உயரமான 22.97 அடியில் 4.59 அடி உயரத்துக்கும், செண்பகத்தோப்பு அணையின் நீா்மட்ட உயரமான 62.32 அடியில் 58.02 அடி உயரத்துக்கும் தண்ணீா் தேங்கியுள்ளது. அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால், மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.