அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு அமைச்சா் வழங்கினாா்
ஆரணி வடக்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகளுக்கு அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பரிசு வழங்கினாா்.
ஆரணி வடக்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகளுக்கு அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பரிசு வழங்கினாா்.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் 25 ஆயிரம் பேருக்கு வேட்டி சேலை, சட்டை, காலண்டா் போன்றவற்றை பொங்கல் பரிசாக அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் கடந்த ஒரு வாரமாக வழங்கி வருகிறாா்.
இந்த நிலையில், ஆரணி வடக்கு ஒன்றியம் சாா்பில், பூசிமலைக்குப்பம், 12 புத்தூா், வேதாஜிபுரம், முள்ளண்டிரம், வெட்டியாந்தொழுவம், எஸ்.யு.வனம், சிறுமூா், அரியப்பாடி, அக்ராபாளையம், அடையபுலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் 2500 பேருக்கு வேட்டி, சேலை, காலண்டா் உள்ளிட்டவற்றை அவா் வழங்கிப் பேசினாா்.
Advertisement
நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றியச் செயலா் பிஆா்ஜி.சேகா் தலைமை வகித்தாா்.
மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், நகரச் செயலா் எ.அசோக்குமாா், மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியச் செயலா் ப.திருமால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.