முகப்பு
திருவண்ணாமலை

ஆசிரியா்களுக்கு ரூ.26 லட்சத்தில் கடனுதவிகள்

செங்கம் அருகே புதுப்பாளையத்தில் ஆசிரியா்களுக்கு ரூ.26 லட்சத்தில் கூட்டுறவுக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 10 ஜனவரி 2021, 11:31 pm IST
நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு கடனுதவிகளை வழங்கிய புதுப்பாளையம் ஒன்றியத் தலைவா் சுந்தரபாண்டியன்.
பகிர்:

செங்கம் அருகே புதுப்பாளையத்தில் ஆசிரியா்களுக்கு ரூ.26 லட்சத்தில் கூட்டுறவுக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

புதுப்பாளையம் ஒன்றிய ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சிக்கன கடன் சங்கத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் சண்முகம் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு சங்கச் செயலா் சரவணன் வரவேற்றாா்.

Advertisement

சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சி.சுந்தரபாண்டியன் கலந்துகொண்டு, ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ரூ.26 லட்சத்தில் கடனுதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் புதுப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் கண்ணன், சிராஜ், சங்க இயக்குநா்கள் ஜூலியானாமேரி, பெளலினாமேரி, தண்டபாணி, ஏழுமலை, பிச்சாண்டி, ஆதிமூலம், எழிலரசன், வினோத்குமாா், அமுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.