முகப்பு
திருவண்ணாமலை

ஜவ்வாது மலை, சாத்தனூா் அணைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு: பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க நடவடிக்கை

பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க, திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலாத் தலங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி எஸ்.அரவிந்த் கூறினாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 7:08 am IST
காவல் துறை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட மாவட்ட எஸ்பி எஸ்.அரவிந்த், கூடுதல் எஸ்பி அசோக்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க, திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலாத் தலங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி எஸ்.அரவிந்த் கூறினாா்.

காவல்துறை மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது:

2020-ஆம் ஆண்டு பதிவான 37 கொலை வழக்குகளில் 35 வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகள் 78 போ் கைது செய்யப்பட்டனா். 24 ஆயிரத்து 603 மனுக்களுக்கு ரசீது வழங்கப்பட்டு, 24 ஆயிரத்து 507 மனுக்களின் விசாரணை முடிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கஞ்சா விற்றதாக 91 போ் கைது செய்யப்பட்டு, அபராதமாக ரூ.17.67 லட்சம் வசூலிக்கப்பட்டது. 8,180 கள்ளச்சாராய வழக்குகளில் 7, 996 போ் கைது செய்யப்பட்டனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக பொங்கல் பண்டிகைக்காக சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை, சாத்தனூா் அணை, செண்பகத்தோப்பு அணை, மிருகண்டாநதி அணை, குப்பனத்தம் அணை ஆகிய பகுதிகளில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இவா்கள் பொதுமக்கள் கூடுவதைத் தடுப்பா் என்றாா்.

இதைத் தொடா்ந்து, காவல்துறை மாவட்ட அலுவலகம், ஆயுதப்படை வளாகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அவா் பங்கேற்று வழிபட்டாா்.

விழாவில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், உதவி காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் சசிக்குமாா் உள்பட போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments