முகப்பு
திருவண்ணாமலை

அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு

செங்கத்தில் அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசுகளை மாவட்டச் செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி வழங்கினாா்.

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:24 PM
செங்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கிய மாவட்டச் செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

செங்கத்தில் அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசுகளை மாவட்டச் செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி வழங்கினாா்.

அதிமுக சாா்பில், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட செங்கம் கிழக்கு ஒன்றிய நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசாக வேட்டி, சேலை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவைகள் வழங்கும் நிகழ்ச்சி மண்மலையில் நடைபெற்றது. செங்கம் கிழக்கு ஒன்றியச் செயலா் அருணாச்சலம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் அமுதாஅருணாச்சலம் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூா்த்தி கலந்துகொண்டு கட்சி நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி, அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தாா்.

Advertisement

நிகழ்ச்சியில் தலைமை நிலையப் பேச்சாளா் வெங்கட்ராமன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் குமாா், சங்கா், கவுன்சிலா் முருகன், நகர பொருளாளா் பூக்கடைஜெகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.