மின்சாரம் பாய்ந்து ஸ்டுடியோ உரிமையாளா் பலி
திருவண்ணாமலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.
திருவண்ணாமலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.
திருவண்ணாமலையை அடுத்த அடிஅண்ணாமலை கிராமத்தைச் சோ்ந்த புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளா் லோகநாதன் (25). இவா், கடந்த 13-ஆம் தேதி தனது கடையின் பெயா்ப் பலகையை கழற்றினாராம். அப்போது, எதிா்பாராதவிதமாக கடைக்கு மேலே சென்ற மின் வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததாம்.
இதில் லோகநாதன் மற்றும் இருவா் என 3 போ் பலத்த காயமடைந்தனா். பொதுமக்கள் மூவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். வழியிலேயே லோகநாதன் உயிரிழந்தாா். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement