டெபாசிட்டுகளுக்கான வட்டியை உயர்த்தியது ஐஓபி
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) டெபாசிட்டுகளுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) டெபாசிட்டுகளுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பல்வேறு கால அளவுகளைக் கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 0.1%-0.8% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, ஒருவாரம் முதல் ஐந்தாண்டுகள் வரையிலும் மற்றும் அதற்கு மேலும் கால அளவுகளைக் கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 4.5 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூத்தகுடிமக்கள் செய்யும் டெபாசிட்டுகளுக்கு கூடுதலாக வழங்கப்படும் 0.50 சதவீத வட்டி எப்போதும்போல் தொடரும்.
வரி சேமிப்புகளுக்காக மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6.8 சதவீதமாக இருக்கும். அதேசமயம், என்ஆர்இ டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அந்த அறிக்கையில் ஐஓபி தெரிவித்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 3,342 கிளைகளும், 3,278 ஏடிஎம் மையங்களும் உள்ளன. கடந்த 2017 டிசம்பர் மாத நிலவரப்படி இந்த வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.3,68,128 கோடியை எட்டியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.