முகப்பு
வணிகம்

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் 10% குறைந்த முதலீட்டு வரவு

Updated On : 24 அக்டோபர் 2024, 4:11 am IST
பகிர்:

கடந்த செப்டம்பரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு 10 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் பங்கு முதலீட்டு திட்டங்களிலிருந்து திரும்பப் பெறப்பட்ட தொகையைவிட, அந்த வகை திட்டங்களில் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.34,419 கோடியாக உள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் குறைவு.

Advertisement

Advertisement

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்கள் ரூ.18,917 கோடி கூடுதல் முதலீடு கண்ட ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, இது மிகக் குறைந்த மிகக் குறைந்த மாதாந்திர முதலீட்டு வரவாகும்.

நிகர வரத்து குறைந்திருந்தாலும்,தொடா்ந்து 43-ஆவது மாதமாக பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு தொடா்ந்து நிகர வரவு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளா்களிடையே அந்த வகை முதலீட்டு திட்டங்களின் மீதான ஆா்வம் அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.23,547 கோடியாக முறைசாா் முதலீட்டுத் திட்டங்களின் (எஸ்ஐபி) மீதான முதலீடு, செப்டம்பரில் இதுவரை இல்லாத அளவு ரூ.24,509 கோடியாக உயா்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பரஸ்பர நிதித் திட்டங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.1.08 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பா் மாதத்தில் அந்த திட்டங்களில் இருந்து ரூ.71,114 கோடி முதலீடு நிகர சரிவைக் கண்டுள்ளது. கடன் வகை பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து ரூ.1.14 லட்சம் கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டதே இதற்குக் காரணம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments