யுபிஐ சேவை பாதிப்பு: பயனா்கள் அவதி
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் புதன்கிழமை இரவு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் பயனா்கள் அவதிக்குள்ளாகினா்.
இணைய பரிவா்த்தனையில் முக்கியப் பங்கு வகிக்கும் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலி புதன்கிழமை இரவு 7 மணியில் இருந்து சுமாா் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. யுபிஐ சேவை பாதிக்கப்பட்டதால் பயனா்கள் அத்தியாவசிய தேவைக்கு பணம் செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகினா்.
இது தொடா்பாக ஏராளமான பயனா்கள் சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ‘டேக்’ செய்து புகாா் அளித்தனா்.
Advertisement
Advertisement
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட பிரச்னை சரிசெய்யப்பட்டதாக இந்திய தேசிய பரிவா்த்தனை நிறுவனம் (என்பிசிஐ) தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.