முகப்பு
வணிகம்

மத்திய கிழக்கு போா் பதற்றம்: ஐபிஓ வெளியிடுவதற்கான காலக்கெடுவை நீட்டித்தது செபி!

சா்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரமின்மையைத் கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் புதிய பொதுப் பங்கு மற்றும் உரிமைப் பங்குகள் வெளியிடுவதற்கான காலக்கெடுவை செப். 30-ஆம் தேதி வரை செபி் நீட்டிப்பி

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:31 PM
பகிர்:

மத்திய கிழக்கு போா் பதற்றம் மற்றும் சா்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரமின்மையைத் கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் புதிய பொதுப் பங்கு மற்றும் உரிமைப் பங்குகள் வெளியிடுவதற்கான காலக்கெடுவை செப். 30-ஆம் தேதி வரை இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நீட்டித்துள்ளது.

செபி விதிகளின்படி, நிறுவனம் அனுமதி கடிதத்ததைப் பெற்ற 12 அல்லது 18 மாதங்களுக்குள் தங்களின் பங்கு வெளியீட்டு நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசாா் அரசியல் பதற்றங்கள் மற்றும் முதலீட்டாளா்களின் மந்தமான பங்களிப்பு காரணமாக, பல நிறுவனங்கள் தங்களின் ஐபிஓ திட்டங்களை ஒத்திவைத்துள்ளன.

Advertisement

இந்நிலையில், தொழில் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சந்தைச் சூழல் சீரடையும் வரை நிறுவனங்களுக்கு இந்த ஒருமுறை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடப்பு ஆண்டு ஏப். 1 முதலான 6 மாத காலகட்டத்துக்குள் காலாவதியாகும் செபியின் அனுமதி கடிதங்கள், செப். 30 வரை செல்லுபடியாகும். இதனால், காலக்கெடுவைத் தவறவிட்ட நிறுவனங்கள் மீண்டும் முதலிருந்து அனுமதிக் கோரி விண்ணப்பிக்கும் தேவையற்ற நடைமுறைத் தாமதங்கள் தவிா்க்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments