முகப்பு
உலகம்

இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை ஜூன் வரை நீட்டித்தது ஏர் இந்தியா! 40,000 இந்தியர்கள் கவலை!

இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை ஏர் இந்தியா மேலும் ஒரு மாதம் நீட்டித்தது தொடர்பாக...

ஏர் இந்தியா விமானம் - பிரதிப் படம்
பகிர்:

இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை வரும் ஜூன் மாத இறுதி வரை ஏர் இந்தியா நிறுவனம் நீட்டித்தது.

இஸ்ரேலில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, தில்லி வழியாக டெல் அவிவ் நகரத்துக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் ஜூன் மாத இறுதி வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக, இஸ்ரேலுக்கான விமான சேவையை மே மாதம் வரை நிறுத்துவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளது.

Advertisement

Advertisement

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் சிறிது காலம் நீடித்த போதிலும், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, பெரும்பாலான விமான நிறுவனங்களை டெல் அவிவ் வழித்தடத்தில் தங்கள் சேவைகளை நிறுத்தும் கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

இந்த விமான சேவை நிறுத்தம் காரணமாக, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களுக்காகவோ அல்லது அப்பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளிலிருந்து தப்பிப்பதற்காகவோ இந்தியாவுக்குப் பயணம் செய்ய விரும்பும், இஸ்ரேலில் உள்ள 40,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களிடையே பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.

summary

Air India has extended the suspension of flight services to Israel until June.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments