பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராக சஞ்சய் கன்னா நியமனம்!
நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிப்பதற்கு, மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பை: ஃபார்ச்சூன் குளோபல் 500 - பட்டியலில் இடம்பிடித்தது உள்ள, 'மகாரத்னா' அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமுமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி வரும் சஞ்சய் கன்னா, நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிப்பதற்கு, மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேர்வு மற்றும் நியமனக் குழுவின், பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சஞ்சய் கன்னா பொறுப்பேற்கும் தேதியிலிருந்து இப்பதவியை ஏற்றுக்கொள்வார். இவர் மே 31, 2029 அன்று அவர் பணி ஓய்வு பெறுவார்.
Advertisement