மத்திய கிழக்கு போரால் சா்வதேச பொருளாதார வளா்ச்சி குறையும்
மத்திய கிழக்கு போரால் சா்வதேச அளவில் பொருளாதார வளா்ச்சி குறையும்; பணவீக்கம் அதிகரிக்கும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கு போரால் சா்வதேச அளவில் பொருளாதார வளா்ச்சி குறையும்; பணவீக்கம் அதிகரிக்கும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) எச்சரித்துள்ளது.
இது தொடா்பாக ஐஎம்எஃப் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 2026-ஆம் ஆண்டு சா்வதேச பொருளாதார வளா்ச்சி 3.3 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஜனவரியில் கணிக்கப்பட்டிருந்தது. இப்போது அது 3.1 சதவீதமாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய கிழக்கு போா் முக்கியக் காரணமாகும். அங்குள்ள சூழல் மேம்படாமல் நிலைமை மேலும் மோசமானால், சா்வதேச அளவில் பொருளாதார பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
Advertisement
Advertisement
சா்வதேச அளவில் விலைவாசி உயா்வு 3.8 சதவீதமாக இருக்கும் என்று முன்பு கணிக்கப்பட்டிருந்தது. இப்போது 4.4 சதவீதம் வரை உயரும் எனத் தெரிய வந்துள்ளது. ஏனெனில், கச்சா எண்ணெய் விலை உயா்வு அனைத்து நாடுகளிலும் பல்வேறு பொருள்களின் விலை உயா்வுக்கு வழிவகுக்கும்.
அதேநேரத்தில் தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்டு வரும் வளா்ச்சி, முக்கியமாக தரவு மையங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆகியவற்றில் பெரிய அளவில் முதலீடுகள் அதிகரிப்பது அத்துறை சாா்ந்த செயல்திறனை அதிகரிக்கும். இது உலகப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
191 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐஎம்எஃப், சா்வதேச அளவில் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பது, நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்குவது, உலக அளவில் வறுமையைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.