முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் வீழ்ச்சி!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

Updated On : 28 ஏப்ரல் 2026, 11:43 am IST
பங்குச்சந்தை வணிகம் - ANI
பகிர்:

நேற்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்த நிலையில் இன்று(ஏப். 28, செவ்வாய்க்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,094.79 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 243.96 புள்ளிகள் குறைந்து 77,059.67 புள்ளிகளில் நிலை பெற்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 43.05 புள்ளிகள் குறைந்து 24,049.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Advertisement

Advertisement

சென்செக்ஸ் 30 பங்குகளில் பெல், எல்&டி, என்டிபிசி, எம்&எம், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் உயர்ந்தும் மற்ற நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.38 சதவீதம், 0.89 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின்றன.

துறை வாரியாக, நிஃப்டி ஐடி, ஆட்டோ, எப்எம்சிஜி, நிதி சேவைகள், மீடியா, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ரியல் எஸ்டேட் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன.

அதேநேரத்தில் மெட்டல், பார்மா பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

கச்சா எண்ணெய் 1.24 சதவீதம் உயர்ந்து 109.6 டாலராக உள்ளது.

summary

Stock Market: Sensex rises 200 pts, Nifty above 24,100

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments