சரிந்து மீளும் பங்குச்சந்தை! ரியல் எஸ்டேட், வங்கிப் பங்குகள் லாபம்!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...
பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 9) சரிவுடன் தொடங்கிய நிலையில் தற்போது சற்றே உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,035.41 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.10 மணியளவில் சென்செக்ஸ் 28.62 புள்ளிகள் உயர்ந்து 73,552.88 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23.75
புள்ளிகள் உயர்ந்து 23,146.75 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
Advertisement
Advertisement
நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.07 சதவீதம் மற்றும் 1.09 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின.
துறைரீதியாக நிஃப்டி ரியல் எஸ்டேட், வங்கி, நிதிச் சேவைகள், நுகர்வோர் பொருள்கள், ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டன. நிஃப்டி ஐடி பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது.
நிஃப்டி50 குறியீட்டில் ட்ரென்ட், இன்டர்குளோப் ஏவியேஷன், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக உள்ளன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் டாடா ஸ்டீல் தவிர மற்ற பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தக தொடக்கத்தில் 95.46 ஆக இருந்தது.