முகப்பு
வணிகம்

புதிய வரலாற்று உச்சத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு!

அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 725.727 பில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Updated On : 20 பிப்ரவரி 2026, 8:39 pm IST
இந்திய ரிசர்வ் வங்கி
பகிர்:

மும்பை: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவிடம் அந்நிய செலாவணி கையிருப்பு 8.663 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 725.727 பில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்:

பிப்ரவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நிய செலாவணி கையிருப்பு 6.711 பில்லியன் அமெரிக்க டாலராக சரிந்து 717.064 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இதுவே ஜனவரி மாதத்தில் உள்ள கையிருப்பு 723.774 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

Advertisement

Advertisement

பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் டாலர் உள்பட பிற கையிருப்பு 3.55 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்து 573.603 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அதே வேளையில், தங்க இருப்பு மதிப்பு 4.99 பில்லியன் டாலர் அதிகரித்து 128.466 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியாவின் இருப்பு நிலையும் இந்த வாரத்தில் 19 மில்லியன் டாலர் அதிகரித்து 4.734 பில்லியன் டாலராக இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

summary

India's forex reserves jumped USD 8.663 billion to hit a new all-time high of USD 725.727 billion in the week ended February 13, the RBI said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments