மின்சார பேருந்து கோப்புப்படம்
வணிகம்

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் 1,085 புதிய மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய உள்ள தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகம்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஹைதராபாத்: பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் 1,085 புதிய மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்ய, தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (டிஜிஎஸ்ஆர்டிசி), முடிவு செய்துள்ளது.

எவே டிரான்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இது தொடர்பாக ஒப்பந்த கடிதம் பெற்றுள்ளதாக ஒலெக்ட்ரா கிரீன்டெக் லிமிடெட் நிறுவனம் இன்று (பிப். 23) தெரிவித்துள்ளது.

இது குறித்து ஒலெக்ட்ரா நிறுவன நிர்வாக இயக்குநர் மகேஷ் பாபு மேலும் தெரிவித்ததாவது:

''பிரதமர் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிப்போம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கும் உலகத் தரம் வாய்ந்த மின்சாரப் பேருந்துகளை உருவாக்குவதற்கு எங்கள் அர்ப்பணிப்பு வலுவான வலுவூட்டலைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் நிகர-பூஜ்ஜிய பங்களிப்பை வழங்க, வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திறமை, வசதி மற்றும் நிலையான சேவையை வழங்க தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்திடம் நாங்கள் நெருக்கமாக பணியாற்ற எதிர்நோக்குகிறோம்'' எனக் குறிப்பிட்டார்.

ஒலெக்ட்ரா மின்சார பேருந்துகள் 12 மீட்டர் தாழ்தள கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும். ஏசி மற்றும் ஏசி அல்லாத வகைகளில், இந்திய சாலை நிலைமைகளுக்கு ஏற்ப அதிக அதிர்வெண் கொண்ட நகர்ப்புற செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிரத்யேக சக்கர நாற்காலி உடன் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த, மேம்பட்ட முன் மற்றும் பின்புற ஏர் சஸ்பென்ஷன் அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரே சார்ஜில் 250 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லும் உயர் திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த பேருந்துகள், சுமார் 45 நிமிடங்களில் சார்ஜ் ஆகி விடும்.

Olectra Greentech Ltd said it has secured a Letter of Intent from the Telangana State Road Transport Corporation through Evey Trans Pvt Ltd for 1,085 electric buses under the PM E-DRIVE initiative.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT