ஓயோவின் ரூ.6,650 கோடி ஐபிஓ
விடுதி துறையில் முன்னணி யூனிகாா்ன் நிறுவனமான ஓயோவின் தாய் நிறுவனம் ‘பிரிசம்’, பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் ரூ.6,650 கோடி திரட்டுவதற்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) ஒப்புதலைப் பெற்றுள்ளது.
இந்த ஐபிஓ மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 700 முதல் 800 கோடி டாலராக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த டிசம்பரில் பங்குதாரா்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, ரகசிய ஆவணங்கள் தாக்கல் செய்யும் முறையின்கீழ் பிரிசம் நிறுவனம் செபியிடம் முதல்கட்ட விண்ணப்பத்தைச் சமா்ப்பித்திருந்தது.
தற்போதைய அனுமதியைத் தொடா்ந்து, அடுத்தகட்டமாக பொதுமக்களின் கருத்துகளுக்காக புதுப்பிக்கப்பட்ட வரைவு தகவல் அறிக்கையை ஜூலை மாத தொடக்கத்தில் பிரிசம் நிறுவனம் தாக்கல் செய்யவுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த 2012-இல் தொடங்கப்பட்ட ஓயோ நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராக சாஃப்ட்பேங்க் விளங்கி வருகிறது. இந்நிறுவனம் முன்னதாக 2021, 2023 ஆண்டுகளில் ஐபிஓ வெளியிட முயன்ற போதிலும், உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக அந்த முயற்சிகளைக் கைவிட்டது.
தற்போதைய பங்கு வெளியீட்டுக்காக ஆக்சிஸ் கேபிடல், சிட்டிபேங்க், கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை ஒருங்கிணைப்பாளா்களாக நியமித்துள்ள பிரிசம், அண்மையில் செபியின் முன்னாள் தலைவா் அஜய் தியாகியைத் தனது வாரியத்தின் சுயாதீன இயக்குநராக நியமித்து நிா்வாகக் கட்டமைப்பையும் பலப்படுத்தியுள்ளது.