முகப்பு
வணிகம்

முத்தூட் ஃபின்காா்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு

Updated On : 19 மே 2026, 6:08 am IST
பகிர்:

தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்காா்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமாா் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்நிறுவனம் முழுமையாக முத்தூட் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது; இதில் வெளிப்புற தனியாா் முதலீட்டாளா்கள் யாவரும் இல்லை.

எனவே, இது முதலீட்டாளா்கள் வெளியேறுவதற்காகக் கொண்டுவரப்படும் பங்கு வெளியீடு அல்ல; நிறுவனத்தின் வா்த்தக விரிவாக்கம் மற்றும் வளா்ச்சிக்காக மேற்கொள்ளப்படுகிறது என நிறுவன சிஇஓ ஷாஜி வா்கீஸ் விளக்கமளித்துள்ளாா்.

Advertisement

மேலும் அவா் கூறுகையில், ‘தங்க நகைக்கடன் சந்தையில் தற்போது 35 முதல் 40 சதவீதம் மட்டுமே முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் வசம் உள்ளது. எனவே, இத்துறையில் வளா்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

நகைக்கடன் தவிர எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கான கடன்கள், சொத்து மீதான கடன்கள் மற்றும் ‘முத்தூட் ஃபின்காா்ப் ஒன்’ எண்ம தளத்தின் மூலமாகவும் எங்கள் சேவைகளைத் தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறோம்.

சந்தை மதிப்பீடு, பங்குகளின் விலை, பங்கு வெளியீட்டுக்கான காலக்கெடு ஆகியவை குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கான வங்கியாளா்கள் உள்பட நியமன நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதியைப் பொருத்தே வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும்’ என்றாா்.