முகப்பு
வணிகம்

போர் எதிரொலி: மார்ச் மாதம் ரூ. 1.14 லட்சம் கோடி நிதியை வெளியேற்றிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

அதிகரித்து வரும் பதற்றம், ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மார்ச் மாதம் ரூ. 1.14 லட்சம் கோடியை வெளியேற்றியுள்ளனர்.

Updated On : 29 மார்ச், 2026 at 5:07 PM
கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம், ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் ஆகியவற்றால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மார்ச் மாதம் ரூ. 1.14 லட்சம் கோடியை வெளியேற்றியுள்ளனர்.

இதற்கு முந்தைய அதிகபட்ச மாதாந்திர வெளியேற்றமானது, அக்டோபர் 2024ல் ரூ. 94,017 கோடியாக இருந்தது.

என்.எஸ்.டி.எல். தரவுகளின் அடிப்படையில், 2026ல் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மொத்தம் ரூ. 1.27 லட்சம் கோடியை வெளியேற்றி உள்ளனர். மார்ச் மாதம் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து, மார்ச் 27ஆம் தேதி வரையான பங்குச் சந்தையில் ரூ. 1,13,380 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

பிப்ரவரியில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 22,615 கோடியை முதலீடு செய்தனர். இது கடந்த 17 மாதங்களில் இல்லாத அதிகபட்ச மாதாந்திர முதலீடாகும்.

இதற்கிடையில், தைவான் மற்றும் தென் கொரியா உள்ளிட் சந்தைகளிலும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் விற்பனையாளர்களாக இருந்துள்ளனர்.

summary

Foreign investors have pulled out Rs 1.14 lakh crore from domestic equities in March.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.