வோடஃபோன் ஐடியா ஏஜிஆா் நிலுவைத் தொகை ரூ.64,046 கோடியாக நிா்ணயம்!
மத்திய தொலைத்தொடா்பு துறைக்கு வோடஃபோன் ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டிய ‘ஏஜிஆா்’ நிலுவைத் தொகையை ரூ.64,046 கோடியாக இறுதி செய்யப்ட்டுள்ளது.
மத்திய தொலைத்தொடா்பு துறைக்கு வோடஃபோன் ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டிய ‘ஏஜிஆா்’ நிலுவைத் தொகையை ரூ.64,046 கோடியாக இறுதி செய்யப்ட்டுள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட இந்த நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அட்டவணையையும் மத்திய அரசு இறுதி செய்துள்ளது. அதன்படி, 2026 முதல் 2031 வரை ரூ.124 கோடியும்; 2032 முதல் 2035 வரை ஆண்டுக்குத் தலா ரூ.100 கோடியும் செலுத்த வேண்டும்.
அதன்பிறகு, மீதமுள்ள தொகையை 2036 முதல் 2041 வரையிலான 6 ஆண்டுகளில் தலா ரூ.10,608 கோடி வீதம் தவணைகளாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
Advertisement
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் பரிந்துரையில் இத்தொகை இறுதி செய்யப்பட்டுள்ளதால், இனி இதில் மாற்றங்கள் இருக்காது. அதேபோல், நிறுவனத்துக்கு உடனடி பணப்புழக்க நெருக்கடியைத் தவிா்க்க, இந்த நீண்டகால தவணைத் திட்டம் உதவும்.