இட்லி சீராளம்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து, பின்பு உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.
தேவையானவை:
இட்லி - 4
வெங்காயம் - 2
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து, பின்பு உளுத்தம் பருப்பு சேர்க்கவும். அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பின்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, ஒரு நிமிடம் மூடவும். பின்னர், மூடியை எடுத்துவிட்டு அதில் சிறு துண்டுகளாக நறுக்கிய இட்லியைச் சேர்த்து கிளறி இறக்கவும். இட்லி சீராளம் ரெடி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.