தாமதமாக இயங்கும் மின்சார ரயில்
தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளிகள் என ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளிகள் என ஏராளமானோர் சென்று வருகின்றனர். குறிப்பாக காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் கால தாமதமாகச் செல்கிறது. இந்த ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் நிற்பதால் இந்த தாமதம் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ரயிலை விரைவாக இயக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.