ஆதார் அட்டை வழங்குவதில் தாமதம்..
சென்னை ஆவடி பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த முகாமில் ஆவடியைச் சேர்ந்த ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சென்னை ஆவடி பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த முகாமில் ஆவடியைச் சேர்ந்த ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால், அவர்களுக்கு எந்தவித ஒப்புதல் சீட்டும் வழங்கப்படவில்லை. பல மாதங்கள் ஆன பின்னர் இதுவரை ஆதார் அட்டை வழங்கவில்லை. கேஸ் நிறுவனம், வங்கிகளில் ஆதார் அட்டை எண் கேட்கின்றனர். இதனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் தினமும் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரைவில் ஆதார் அட்டை வழக்க வேண்டும்.