முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 802

உன்னுடைய அருளைத் தந்தருள வேண்டும்...

Updated On : 19 ஏப்ரல், 2018 at 10:49 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:17 PM

உன்னுடைய அருளைத் தந்தருள வேண்டும் என்று கோரும் இப்பாடல் விருத்தாசலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையிலான எல்லாச் சீர்களிலும் நான்கு நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் பயில்கின்றன.

தனதத்த தனதத்த தனதத்த தனதத்த

Advertisement

                தனதத்த தனதத்த    தனதான

 
பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி

                        பறியக்கை சொறியப்பல்        வெளியாகிப்

      படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க

                        பழமுற்று நரைகொக்கி        னிறமாகி

விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு

                        மெலிவுற்று விரல்பற்று        தடியோடே

      வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை

                        விடுவித்து னருள்வைப்ப        தொருநாளே

அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி

                        னடல்வஜ்ர கரன்மற்று        முளவானோர்

      அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்

                        அதுலச்ச மரவெற்றி            யுடையோனே

வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற

                        வடிவுற்ற முகில்கிட்ணன்        மருகோனே

      மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்

                        வளர்விர்த்த கிரியுற்ற        பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.