ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி பெயிண்ட்... - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
சென்னை : தமிழக ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டதற்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை (மே 30) ‘வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள்’ என்ற பெயரில் திருவள்ளுவரைச் சிறப்பித்து விழா கொண்டாடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தில் அவர் காவி உடையில் இருந்தது விவாதப் பொருளாகியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் : “எப்போதுமே மௌனமாக இருக்கிறவர் முதல்வராக இருக்கிறார் என்கிற தைரியத்தில், ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி பெயிண்ட் அடித்து உள்ளனர்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசு ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் நாளை அதிகாரபூர்வமாக கொண்டாடுகிறது.
ஆனால், வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள் என்று புதிதாக ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
தி.மு.கழக ஆட்சியல் இதே மாதிரி வேலையைப் பார்த்தால், அப்போதைய ஆளுநரைக் கடுமையாகக் கண்டித்தோம்; திருத்தினோம்.
இப்போது மறுபடியும் தமிழர்களுடைய சுயமரியாதையை உரசிப்பார்க்கிறார்கள்.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் சோஃபா மாடல் அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட அனுமதி அளியுங்கள் என்று தில்லியல் கேட்ட மாதிரி, இந்த விஷயத்திலும் முதல்வர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு விஷயத்தில்தான் முதல்வர் அமைதியாக இருக்கிறார் என்றால், கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி பெயிண்ட் அடிக்கிற அநியாயத்தைத் தட்டிக் கேட்கவும் தயங்குவது ஏன்?” என்று குறிப்பிட்டுள்ளார்.