பத்தாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 6
அமரர்களுக்கும் முனிவர்களுக்கும்
பாடல் 6
கூத்தன், கோவலன், குதற்று வல் அசுரர்கள் கூற்றம்,
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்,
வாய்த்த தண்பணை வள வயல் சூழ் திருமோகூர்
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே.
எம்பெருமான் கூத்தன், பசுக்களை மேய்த்த கோவலன், துன்புறுத்துகின்ற கொடிய அசுரர்களுக்கு எமன், போற்றுகின்ற நமக்கும் அமரர்களுக்கும் முனிவர்களுக்கும் இன்பமயமானவன், நெருங்கிய, குளிர்ந்த நீர்நிலங்கள், வளமான வயல்களால் சூழப்பட்ட திருமோகூரிலே எழுந்தருளியுள்ளவன், நம்பத்தக்கவன், அவனுடைய தாமரைத் திருவடிகளே நமக்குக் காப்பு, வேறெதுவும் காப்பில்லை.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.