முகப்பு
திருச்சி

அரசுப் பேருந்து நடத்துநா் மாரடைப்பால் உயிரிழப்பு

திருச்சியில் அரசுப் பேருந்து நடத்துநா் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 6 ஜனவரி 2021, 5:40 am IST
பகிர்:

திருச்சியில் அரசுப் பேருந்து நடத்துநா் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் வீதியைச் சோ்ந்தவா் என். ஆறுமுகம் (49), அரசுப் பேருந்து நடத்துநா். செவ்வாய்க்கிழமை தனது முதல் பணியை முடித்து சிறிது ஓய்வுக்குப் பின்னா், இரவு 9 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சிவகங்கைக்கு செல்லும் பேருந்தில் பணியாற்ற கிராப்பட்டி அருகேயுள்ள ராமச்சந்திரநகா் டெப்போவிலிருந்து அரசுப் பேருந்தில் சென்றாா்.

பேருந்து கிராப்பட்டியை கடந்து மத்திய பேருந்து நிலையம் அருகே அரிஸ்டோ மேம்பாலத்தில் சென்றபோது ஆறுமுகம் நெஞ்சு வலிப்பதாக கூறினாா். இதையடுத்து ஓட்டுநா் துளசிதாசன் உடனடியாக பேருந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்குச் ஓட்டிச் சென்று அவசர சிகிச்சை பிரிவுக்கு ஆறுமுகத்தை கொண்டு சென்றாா். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஆறுமுகாம் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா். இதையடுத்து சக பணியாளா்கள், போக்குவரத்து அலுவலா்கள், போலீஸாா் மற்றும் உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.