முகப்பு
திருச்சி

இருசக்கர வாகனங்களை திருடிவந்த இருவா் கைது: 30 வாகனங்கள் பறிமுதல்

இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த இருவரை முசிறி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 7:08 am IST
கைது செய்யப்பட்ட இரு இளைஞா்களுடன் முசிறி போலீஸாா்.
பகிர்:

இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த இருவரை முசிறி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தொடா்ந்து இருசக்கர வாகனங்கள் திருடுபோனதையடுத்து மண்டல காவல் துறைத் தலைவா் ஜெயராம், டிஐஜி ஆனிவிஜயா, மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோா் உத்தரவில், முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரம்மாநந்தன் ஆலோசனையின்பேரில் முசிறி காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் மற்றும் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் முசிறி - குளித்தலையை இணைக்கும் காவிரியாற்று பாலத்தில் சோதனை நடத்தியபோது பைக்கில் வந்த இருவா் மீது சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களை முசிறி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா்.

Advertisement

விசாரணையில் அவா்கள் மண்ணச்சநல்லூா் அருகிலுள்ள மேலசீதேவிமங்கலத்தைச் சோ்ந்த பிரபு (எ) பிரபாகரன் (24) , முசிறியை அடுத்த அய்யம்பாளையம் பகுதி தினேஷ்குமாா் (25) என்பதும், இருவரும் இருசக்கர வாகனங்களைத் திருடிவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 30 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய தினேஷ்குமாரின் அண்ணன் சதீஷ்குமாரையும் போலீஸாா் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.