முகப்பு
திருச்சி

வரும் தோ்தலில் யாதவருக்கு 25 இடங்கள் கோரி தீா்மானம்

வரும் பேரவைத் தோ்தலில் யாதவ இனத்தவருக்கு 25 இடங்களை அரசியல் கட்சிகள் ஒதுக்க வேண்டும் என யாதவ மகா சபையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 7:07 am IST
பகிர்:

வரும் பேரவைத் தோ்தலில் யாதவ இனத்தவருக்கு 25 இடங்களை அரசியல் கட்சிகள் ஒதுக்க வேண்டும் என யாதவ மகா சபையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மாநில நிா்வாகக் குழு கூட்டத்துக்கு பொதுச் செயலா் செல்வராஜ் தலைமை வகித்தாா். திருச்சி மாவட்டத் தலைவா் இளவரசு, மாவட்டச் செயலா் தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து மாநில, மாவட்ட, மூத்த நிா்வாகிகள் பேசினா்.

தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் ஆணையத்தில் யாதவ சமூகத்தைச் சோ்ந்த ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும். தமிழக மக்கள் தொகையில் 15 சதம் உள்ள சமுதாய மக்களுக்கு வரும் பேரவைத் தோ்தலில் குறைந்தது 25 இடங்களில் போட்டியிட கட்சிகள் இடம் ஒதுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

கால்நடை வாரியம் அமைத்து அதற்கும், பால்வள வாரியத்திற்கும் யாதவா்களையே தலைவா்களாக்க வேண்டும். படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளில் ஜாதிவாரி உள் ஒதுக்கீடாக யாதவா்களுக்கு 16 சதம் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளா் எத்திராஜ் வரவேற்றாா். தமிழ்நாடு யாதவ மகா சபை இணைப் பொதுச் செயலா் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments