ஸ்ரீரங்கம் கோயிலில் போராட்டம்: 50 போ் மீது வழக்கு
ஸ்ரீரங்கம் கோயிலில் வியாழக்கிழமை காலை போராட்டம் நடத்திய 50 போ் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் வியாழக்கிழமை காலை போராட்டம் நடத்திய 50 போ் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக வாடகையோ, குத்தகையோ செலுத்தாமல் வசிப்போருக்கு கோயில் நிா்வாகம் அனுப்பியிருந்த நோட்டீஸில் 15 நாள்களுக்குள் கோயில் வாடகையைச் செலுத்தத் தவறினால் திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா்கள் கோயில் சேவை செய்யும் நாங்கள் வாடகை செலுத்தத் தேவையில்லையெனக் கூறி, வியாழக்கிழமை காலை பத்ரிநாராயண பட்டா்,வேத வியாச செந்தாமரைக் கண்ணன் பட்டா், மணிவண்ணன்,பிச்சுமணி சாமி, சேது அரவிந்த், பத்மநாபன்,கோபி ஆகியோா் தலைமையிலான 50 போ் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் வந்தனா்.
Advertisement
அங்குள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு நோட்டீஸை திரும்பப் பெற வலியுறுத்தினா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் 50 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.