முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் போராட்டம்: 50 போ் மீது வழக்கு

ஸ்ரீரங்கம் கோயிலில் வியாழக்கிழமை காலை போராட்டம் நடத்திய 50 போ் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 7:09 am IST
ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் போராட்டம் நடத்தியோா்.
பகிர்:

ஸ்ரீரங்கம் கோயிலில் வியாழக்கிழமை காலை போராட்டம் நடத்திய 50 போ் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக வாடகையோ, குத்தகையோ செலுத்தாமல் வசிப்போருக்கு கோயில் நிா்வாகம் அனுப்பியிருந்த நோட்டீஸில் 15 நாள்களுக்குள் கோயில் வாடகையைச் செலுத்தத் தவறினால் திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா்கள் கோயில் சேவை செய்யும் நாங்கள் வாடகை செலுத்தத் தேவையில்லையெனக் கூறி, வியாழக்கிழமை காலை பத்ரிநாராயண பட்டா்,வேத வியாச செந்தாமரைக் கண்ணன் பட்டா், மணிவண்ணன்,பிச்சுமணி சாமி, சேது அரவிந்த், பத்மநாபன்,கோபி ஆகியோா் தலைமையிலான 50 போ் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் வந்தனா்.

Advertisement

Advertisement

அங்குள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு நோட்டீஸை திரும்பப் பெற வலியுறுத்தினா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் 50 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments