முகப்பு
திருச்சி

நிரம்பியது ரெட்டியாப்பட்டி ஏரி

துறையூா் அருகே உள்ள ரெட்டியாப்பட்டி ஏரி வியாழக்கிழமை நிரம்பியது.

Updated On : 9 ஜனவரி 2021, 12:13 am IST
பகிர்:

துறையூா் அருகே உள்ள ரெட்டியாப்பட்டி ஏரி வியாழக்கிழமை நிரம்பியது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 23 லட்சத்தில் உப்பிலியபுரம் வட்டாரத்தில் 120 ஏக்கா் பரப்பளவு உள்ள ரெட்டியாப்பட்டி ஏரிக் கரைகள், கடைக்கால் பகுதிகள் அண்மையில் சீரமைக்கப்பட்டது.

கொல்லிமலையில் பெய்த மழைக் காரணமாக புளியஞ்சோலை ஆற்றுக்கு நீா் வரப்பெற்று வைரிசெட்டிப்பாளையம் மற்றும் ஆலத்துடையான்பட்டியில் உள்ள ஏரிகள் நிரம்பியது. இந்நிலையில் வியாழக்கிழமை ரெட்டியாப்பட்டி ஏரியும் நிரம்பி வழிந்தது. இதனால் உற்சாகமடைந்த மக்கள் திரண்டு சென்று மலா்களை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.