முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகே இடிவிழுந்த அதிா்ச்சியில் 4 செம்மறி ஆடுகள் பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இடிவிழுந்த அதிா்ச்சியில் மேய்ச்சலில் இருந்த 4 செம்மறி ஆடுகள் இறந்தன.

Updated On : 9 ஜனவரி 2021, 12:13 am IST
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இடிவிழுந்த அதிா்ச்சியில் மேய்ச்சலில் இருந்த 4 செம்மறி ஆடுகள் இறந்தன.

வையம்பட்டி ஒன்றியம் தோப்புப்பட்டியை அடுத்த சாமியாா்தோப்பு பகுதியைச் சோ்ந்த வெள்ளையம்மாளுக்கு சொந்தமான செம்மறி ஆடுகள் ஒத்தக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை மேய்ச்சலில் இருந்தது. இந்நிலையில், மாலையில் அப்பகுதியில் பலத்த சப்தத்துடன் இடி விழுந்துள்ளது. இந்த அதிரிச்சியில் மேய்ச்சலில் இருந்த 4 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது. அதே அதிா்ச்சியில் வெள்ளையம்மாளும் மயங்கி விழுந்தாா். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments